குஜராத்தின் மாதவ்பூர் மேளாவின் வருடாந்திர திருவிழாவானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்தில் உள்ள மாதவ்பூர் கெட் என்னும் இடத்தில் நடைபெறும்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மக்கள் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து குஜராத்திற்கு வருகை புரியும் பகவான் கிருஷ்ணர் மற்றும் ருக்மிணியின் சிறப்புகள் குறித்து கொண்டாடுகின்றனர்.
இந்த விழாவில் எட்டு வடகிழக்கு மாநில மக்கள் பங்கேற்கின்றனர்.
இந்தத் திருவிழாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மன்னர் பீஷ்மக்கின் வம்சாவளியான மிஷ்மி பழங்குடியினருடனான தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றது.
இது குஜராத் மாநிலத்தின் கலாச்சார ஒருங்கிணைப்பை “ஒரே பாரதம் - உன்னத பாரதம்” என்ற திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரங்களுடன் இணைக்கின்றது.