TNPSC Thervupettagam

மாதிரி நடத்தை விதிமுறைகள்

March 11 , 2019 2301 days 693 0
  • தேர்தல் ஆணையம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதியன்று ஒட்டுமொத்த நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாதிரி நடத்தை விதிமுறைகளை விதித்துள்ளது.
  • இது அடுத்து வரும் மக்களவைத் தேர்தல்களுக்கான தனது முழுமையான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
  • 2019 மக்களவைத் தேர்தல் இவ்வருடம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதியன்று நடைபெறும்.
  • தற்போதைய 16வது மக்களவையின் பதவிக்காலம் ஜீன் 03-ம் தேதியுடன் முடிவடைகின்றது.
  • மாதிரி நடத்தை விதிமுறைகள் – பொதுவான நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள், தேர்தல் தினம், வாக்குச் சாவடிகள், கண்காணிப்பாளர்கள், ஆட்சியில் உள்ள கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகிய எட்டு விதிமுறைகளோடு தொடர்புடையதாகும்.
  • ஒருவேளை ஏதேனும் ஒரு கட்சி இந்த நடத்தை மாதிரி விதிமுறைகளை மீறினால், அக்கட்சி இந்த விதிமுறைகளின் ஒரு பகுதியை மீறியதாக அதன் மீது குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் இந்த விதிமுறை சட்டப் பின்னணி எதையும் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்