மாநிலக் காவல் படைகளை நவீனமயமாக்கும் ஒரு திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கு வேண்டி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டமானது 1969-70 ஆம் ஆண்டிலிருந்து உள்துறை அமைச்சகத்தினால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமைகள் தொடர்பான சிக்கல்களைச் சமாளிப்பதற்காக மாநில அரசுகள் ராணுவம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சார்ந்திருப்பதைப் படிப் படியாகக் குறைப்பதாகும்.
மாநிலக் காவல் படைகளுக்கு போதுமான அளவில் உபகரணங்கள் வழங்குவதன் மூலமும் அவற்றின் பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும் இந்த நோக்கமானது நிறைவு செய்யப்படும்.