கூட்டுறவு கூட்டாட்சிக் கொள்கையை மேம்படுத்தச் செய்வதற்காக செயல்படும் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பிரதமர் தலைமையிலான இந்தச் சபையானது, ஆறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.
தவிர, இது28 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத்தினைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோரைக் கொண்டதாகும்.
இதில் 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர உறுப்பினர்களாக விளங்குவர்.
உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நிலைக்குழுவையும் அரசு மறு சீரமைத்துள்ளது.