உத்தரகாண்ட், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மாநில அரசுப் பள்ளிகளில் குறைந்த அளவில் மாணவர் சேர்க்கைப் பதிவாகியுள்ளன.
இந்த வீழ்ச்சியைத் தடுப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் (MoE) ஆனது, "சீராக்கும் நடவடிக்கைகளை" எடுக்குமாறு இந்த 11 மாநிலங்களைக் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில், 2023-24 ஆம் ஆண்டில், 64% அரசுப் பள்ளிகளில் 37% மாணவர் சேர்க்கை பதிவாகியுள்ள அதே சூழலில் சுமார் 21% அரசு உதவி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 46% ஆக உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், அரசுப் பள்ளிகளில் மொத்த மாணவர் சேர்க்கை 46.33% (40.5 லட்சம்) ஆக உள்ளது, இது அரசு உதவி பெறாத பள்ளிகளில் 52.09% (45.53 லட்சம்) ஆக இருந்தது.
கேரளாவில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 46.37 லட்சமாக இருந்தது, என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டில் 45.50 லட்சமாகக் குறைந்துள்ளது.