மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பெங்களூருவில் நடைபெறுகின்ற ‘மாந்தன்’ கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார்.
இது மூன்று நாட்கள் அளவிலான மாநாடு மற்றும் பொதுக் கண்காட்சி ஆகும்.
சாலைகள், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் பல சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதித்து மாநிலத்துடன் செயலில் ஈடுபடுவதை மாந்தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாந்தன் கண்காட்சியின் கருத்துரு, ‘நடவடிக்கைக்கான கருத்துகள்: திறன்மிகு, நிலையான, சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தளவாடச் சுற்றுச்சூழல் அமைப்பினை நோக்கி' என்பதாகும்.