மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025 – அக்டோபர்
October 8 , 2025 242 days 226 0
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 01 முதல் 31 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
இது விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகாலக் கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் சரியான நேரத்தில் மற்றும் தரமான பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கௌரவிப்பதோடு, அதற்கான கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
இந்த மாதம் ஆனது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொண்டாடப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Every Story is Unique, Every Journey Matters" என்பதாகும்.