மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்பு மற்றும் உதவி ஆதரவை மேம்படுத்துவதற்காக இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா திட்டமானது, தகவல் தொழில்நுட்பம் (IT), AVGC (Animation, Visual Effects, Gaming and Comics), விருந்தோம்பல் மற்றும் உணவு மற்றும் பானங்கள் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட, தொழில் துறைக்குத் தொடர்புடைய பயிற்சியை வழங்கும்.
இந்தத் திட்டம், பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருத்தமான பணி சார்ந்த மற்றும் செயல்முறை அடிப்படையிலான பணிகளில் கவனம் செலுத்துகிறது.
திவ்யாங் சஹாரா யோஜனா திட்டமானது, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்தர உதவி சாதனங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியச் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்திற்கு (ALIMCO) உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்காக, பிரதம அமைச்சரின் திவ்யாஷா கேந்திரா மையங்களை வலுப்படுத்தவும், நவீன சில்லறை விற்பனை மையங்கள் போன்ற உதவி தொழில்நுட்பச் சந்தைகளை அமைக்கவும் இந்த நிதி நிலை அறிக்கை முன்மொழிகிறது.