மாற்றுத் திறனாளிகளுக்காக வேண்டி சமூக நீதியை அணுகுவது குறித்த வழிகாட்டுதல்கள்
September 3 , 2020 1806 days 702 0
உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நீதி அமைப்புகளை எளிதில் அணுகும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பானது மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக நீதியை அணுகுவது குறித்த தனது முதலாவது வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களானது 10 கொள்கைத் தொகுப்புகளையும் அதைச் செயல்படுத்துதலுக்கான 54 நிலைகளையும் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தமானது 21 ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகளின் முதலாவது மிக முக்கியக் கூறாக 2007 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
மாற்றுத் திறனாளி என்பவர் நீண்ட காலமாக உடல் ரீதியாக, மன ரீதியாக, அறிவு சார்ந்த அல்லது உணர்திறன் குறைபாடுகளைக் கொண்டவர்களாவர்.
ஐக்கிய நாடுகளால் பராமரிக்கப்படும் புள்ளியியலின் படி, இந்தியாவில் அனைத்து வயதுக் குழுவைச் சேர்ந்தவர்களில் 2.4% ஆண்களும் 2% பெண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.
இதை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 12.9% பெண்களும் 12.7% ஆண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.