TNPSC Thervupettagam

மாவட்ட நீதிபதி நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம்

October 14 , 2025 14 hrs 0 min 25 0
  • வழக்கறிஞர் மன்றப் பணியிலும் நீதித் துறை சேவையிலும் ஏழு ஆண்டுகள் ஒருங்கிணைந்த அனுபவம் கொண்ட நீதித்துறை அதிகாரிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்த முடிவுக்கு இந்திய அரசியலமைப்பின் 233வது சரத்தினை அரசியலமைப்பு அமர்வு சுட்டிக் காட்டியது.
  • முன்னதாக, ஏழு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே மாவட்ட நீதிபதிகளாக நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்களாக இருந்தனர்.
  • வழக்கறிஞர்கள் நீதித்துறை பணியில் சேர்ந்தவுடன் தங்கள் வழக்கறிஞர் அந்தஸ்தை இழக்க மாட்டார்கள் என்று நீதிமன்றம் கூறியது.
  • மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான குறைந்த பட்ச வயது 35 வயது ஆகும்.
  • இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு வேண்டி மாநில அரசுகள் ஆனது உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து மூன்று மாதங்களுக்குள் விதிகளைத் திருத்த வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்