இந்தியக் கடலோரக் காவற்படையின் தலைமை இயக்குநர் V.S.பதானியா என்பவர் ஓகா என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிதவை வானூர்தி நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
மேலும், அவர் வாதினார் என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ள கடலோரக் காவல் படையின் படகுத் துறைக்கும் அடிக்கல் நாட்டினார்.
இரு மையங்களும் குஜராத்தின் கடலோரத் தேவபூமியான துவாரகா மாவட்டத்தில் அமைந்துள்ளன.
மிதவை வானூர்தி நிலையம் என்பது தேவையுள்ள இடங்களுக்குப் பயண வசதியினை அளிப்பதற்கும், மிதவை வானூர்திகள் தரையிறங்க இசைவு செய்யும் வகையிலான உள்கட்டமைப்பினைக் கொண்ட ஒரு முனையமாகும்.