TNPSC Thervupettagam

மித்தாலி விரைவு இரயில்

March 30 , 2021 1573 days 667 0
  • சமீபத்தில் ‘மித்தாலி விரைவு இரயில் எனப்படும் புதிய பயணியர் இரயில் தொடங்கி வைக்கப் பட்டது.
  • இது இந்தியப் பகுதியில் மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைய்குரி என்ற பகுதியினையும் தாக்காவினையும் இணைக்கிறது.
  • இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இரு நாடுகளுக்கிடையே இயங்கும் மைத்ரி விரைவு இரயில் (தாக்கா – கொல்கத்தா) மற்றும் பந்தன் விரைவு இரயில் (குல்நா-கொல்கத்தா) ஆகியவற்றை அடுத்து இயக்கப் படும் மூன்றாவது பயணியர் இரயில் இதுவாகும்.
  • இரு நாடுகளுக்கடையே இயக்கப் படும் இந்தப் புதிய பயணியர் இரயிலானது “பங்கபந்து” ஷேக் முஜிபூர் ரஹூமானின் பிறந்த நாள் நூற்றாண்டு மற்றும் வங்க தேசத்தின் சுதந்திரப் பொன்விழா அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்