2022 ஆம் ஆண்டு மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகளானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலாக்கப்பட்டது.
முதலாவது மின்னணுக் கழிவு விதிகள் 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
சமீபத்திய விதிகளானது, புதிய விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இது ஒவ்வொரு மின்னணுத் தயாரிப்புகளின் உற்பத்தியாளர், தயாரிப்பாளர், புதுப்பிப்பாளர், உடைத்தல் மற்றும் மறு சுழற்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களின் (EEE) தயாரிப்புச் செயல்முறையில் அபாயகரமான பொருட்களின் பயன்பாட்டிற்காக இது வரம்பினை விதித்தது.
மின்னணு உபகரணங்களின் உற்பத்தியில் ஈயம், பாதரசம், காட்மியம் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற விதிமுறையினை இது விதித்தது.
உற்பத்தியின் போது உருவாக்கப்படும், மின்னணுக் கழிவுகளைச் சேகரிப்பது மற்றும் அதன் மறுசுழற்சி அல்லது அகற்றலை உறுதி செய்வது உற்பத்தியாளரின் பொறுப்பு ஆகும்.
இருப்பினும், சட்டத்தின் விதிகளின் கீழ், பயன்படாத மின்கலங்கள், பொதிகளுக்குப் பயன்படுத்தப் படும் நெகிழிகள், குறு நிறுவனங்கள் மற்றும் ரேடியோ கதிரியக்கம் உள்ள கழிவுகளுக்கு இந்த விதி பொருந்தாது.