TNPSC Thervupettagam

மின்னணுத் தடுப்பு மருந்து நுண்ணறிவு அமைப்பு (EVIN)

October 23 , 2020 1747 days 673 0
  • இந்திய அரசானது கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கு ஒரு மையத்தை உருவாக்குவதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவானது கோவிட் – 19 தொற்றிற்காக வேண்டி பல்வேறு தடுப்பு மருந்துகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இந்திய அரசானது இந்தத் தடுப்பு மருந்தைச் சேமித்து வைப்பதற்காக EVIN அமைப்பைப் பயன்படுத்த இருக்கின்றது.
  • EVIN (Electronic Vaccine Intelligence Network) ஆனது தற்பொழுது இந்தியாவில் நோய் தடுப்புத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • EVIN ஆனது தடுப்பு மருந்தின் நிகழ்நேரக் கண்காணிப்பை மேற்கொள்கின்றது.
  • EVIN ஆனது தற்பொழுது கோவிட் – 19 எதிர்வினைப் பொருளில் விநியோகச் சங்கிலியைக் கண்காணிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தேசிய சுகாதாரத் திட்டத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்