மின்னணு வாக்குப் பதிவு செயல்முறை – தெலங்கானா
October 12 , 2021
1353 days
596
- தெலங்கான மாநில தேர்தல் ஆணையமானது “கைபேசி சார்ந்த மின்னணு வாக்குப் பதிவு முறையின்” சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலங்களில் தேர்தல்களை நடத்துவதன் அவசியம் காரணமாக இந்த முறையானது உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த முறையானது வெற்றி பெற்றால் வீட்டில் இருந்த படியே திறன்பேசிகளைப் பயன்படுத்தி வாக்களிக்க இயலும்.
- இதன் சோதனை ஓட்டமானது அக்டோபர் 20 அன்று தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
- இது இந்தியாவின் முதலாவது ஸ்மார்ட்போன் அடிப்படையிலான மின்னணு வாக்குப் பதிவு செயல்முறையாக விளங்கும்.

Post Views:
596