மின் ஆளுகை தொடர்பான 23வது தேசிய மாநாடு - 2020 (National Conference on e-Governance - NCeG) ஆனது மும்பையில் நடைபெற்று வருகின்றது.
இந்த மாநாடானது மகாராஷ்டிர மாநில அரசுடன் இணைந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்க்கும் துறை (Department of Administrative Reforms & Public Grievances - DARPG) மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, “இந்தியா 2020: டிஜிட்டல் மாற்றம்” என்பதாகும்.