TNPSC Thervupettagam

மீன்வளம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பில் கண்காணிப்பு குறித்த தேசியக் கட்டமைப்பு 2025

November 26 , 2025 16 hrs 0 min 11 0
  • மீன்வளம் மற்றும்  நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தேசிய டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும்.
  • இது கடல் சார் உணவுப் பொருட்களை "பண்ணையிலிருந்து உணவு வரை" மற்றும் "மீன்பிடிப்பு முதல் நுகர்வோர் வரை" என்ற வகையில் நிகழ்நேரத்தில் கண்காணிக்கும்.
  • இது இந்தியா முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பில் பல்வேறு கண்காணிப்பு நடைமுறைகளை ஒன்றிணைக்கிறது.
  • இந்த அமைப்பு ஆனது QR குறியீடுகள், GPS, IoT சாதனங்கள் மற்றும் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும்.
  • இது உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு சிறந்த அணுகலை உறுதி செய்ய உதவுகிறது.
  • இந்தக் கட்டமைப்பில் சிறு மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எளிதாக பங்கேற்கக் கூடிய ஆதரவையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்