இந்தியப் புவியியல் கள ஆய்வு நிறுவனமானது (Geological Survey of India) மேகாலயாவில் உள்ள 2 முக்கியப் புவியியல் தளங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை எடுத்துள்ளது.
கிழக்கு காசி குன்று மாவட்டத்தின் சோப்ஹாரில் உள்ள தெரியாகாட் மற்றும் மாமலுக் குகை ஆகியவை அந்த இரண்டு புவியியல் தளங்களாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் புவியியல் காலகட்டம் குறித்த ஆதாரங்களாக விளங்குவதால் இவை முக்கியத்துவம் வாய்ந்த தளங்களாக விளங்குகின்றன.
மாமலுக் குகை
இந்தத் தளமானது 4200 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு முக்கியமான காலநிலை நிகழ்வின் ஆதாரமாக விளங்குகின்றது.
மாமலுக் குகையில் உள்ள பொங்கூசிப் பாறையானது (stalagmite) சர்வதேச பாறையடுக்குப் பிரிவு மற்றும் தளமாக (GSSP - Global Stratotype Section and Point) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் புவியியல் காலகட்டத்தின் அடையாளமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் குகையாகும்.
தெரியாகாட்
இந்தத் தளமானது கிரட்டசியோஸ் (K) – பேலியோஜீனின் (Pg) பெரும் அழிவு நிகழ்வைக் குறிக்கின்றது.
தெரியாகாட் தளமானது இந்தியாவில் கிரட்டசியோஸ் – பேலியோஜீன் (K- Pg) எல்லை மாற்றத்தின் முழுமையான பதிவுகளைக் கொண்டிருக்கின்றது.