முதலாம் ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் 1000வது ஆண்டு நிறைவு
July 23 , 2025 4 days 58 0
ராஜேந்திர சோழனின் கங்கைச் சமவெளிக்கான இராணுவப் படையெடுப்பு கங்கை கொண்ட சோழபுரம் கட்டுவதற்கு உத்வேகம் அளித்தது.
முதலாம் ராஜேந்திர சோழனின் வடக்கு திசைப் படையெடுப்பின் 1000வது ஆண்டு நிறைவை தமிழ்நாடு இந்த ஆண்டு கொண்டாடுகிறது.
ராஜேந்திர சோழன் 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டத்தை ஏற்று வெற்றியைக் கொண்டாடினார்.
அவர் இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தையும் கட்டினார்.
இது யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட கட்டிடக் கலைகளில் ஒன்றான கங்கை கொண்ட சோழீஸ்வரத்துடன் இடம்பெற்றுள்ளது.
இது யுனெஸ்கோவால் மூன்று பெரிய வாழும் சோழ கோயில்களில் ஒன்றாக பட்டியலிடப் பட்டுள்ளது.
இது பிரகதீஸ்வரர் கோயில் என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கி.பி 1025 ஆம் ஆண்டு முதல் சோழ வம்சத்தின் வீழ்ச்சி காலமான கி.பி 1279 ஆண்டு வரை தலைநகராக இருந்தது.
வடக்கில் துங்கபத்ரா முதல் தெற்கில் சிலோன் வரையில் முழு தென்னிந்தியாவின் விவகாரங்களையும் இந்த நகரம் கட்டுப்படுத்தியது.
இது 11-12 ஆம் நூற்றாண்டுகளில் இரண்டாவது மிகவும் பெரிய மற்றும் முக்கியமான நகரமாகவும், பாண்டிய நாட்டில் மதுரை மற்றும் சேர நாட்டில் கரூர் போன்று அரசியல், வணிக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது.
ஆயினும் கூட, கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு எதுவும் இல்லை.
அவரது மகன் வீர ராஜேந்திரனின் கல்வெட்டிலிருந்தே, அவரது தந்தை இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது.
ராஜேந்திரனின் மூன்றாவது மகனான வீர ராஜேந்திரனின் கல்வெட்டு என்பது, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள அரண்மனையை சோழ-கேரளன் திருமாளிகை என்று குறிப்பிடுகிறது.
முன்னதாக, விஜயாலயனால் முத்தரையர் குலத் தலைவர்களிடமிருந்து தஞ்சாவூர் கைப்பற்றப்பட்டதிலிருந்து அது சோழர்களின் தலைநகராக இருந்தது.
முதலாம் ராஜ ராஜன் காலமான சில ஆண்டுகளுக்குள், அவரது மகன் ராஜேந்திரன் தனது தலைநகரைக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
நகரம், அதன் கோயில் மற்றும் சோழ கங்கம் என்று அழைக்கப்படும் அதன் பெரிய ஏரி ஆகியவை முதலாம் ராஜேந்திர சோழனின் (1012-1044 CE) குறிப்பிட்ட சாதனைகளின் இணைந்தவொரு அமைப்பாக உள்ளன.
திருவலங்காடு, எசலம் மற்றும் கரந்தை செப்புத் தகடுகள், பல கல்வெட்டுகள் மற்றும் இலக்கியப் படைப்புகள் அவரது வெற்றியைக் கொண்டாடுகின்றன.
முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைச் சமவெளிப் படையெடுப்பின் போது, கலிங்க ஆட்சியாளர் மற்றும் வங்காளத்தின் பால ஆட்சியாளரான மகிபாலன் உட்பட பல மன்னர்களையும் அரசர் குலத் தலைவர்களையும் தோற்கடித்தார்.
திருவலங்காடுச் செப்புத் தகடுகளின் படி, தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள் கங்கை நீரைத் தங்கள் தலையில் சுமந்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழ கங்கத்தில் அந்த நீரானது ஊற்றப் பட்டது.
ராஜேந்திரன் தனது தலைநகரில் கங்கையின் நீருடன் சோழ கங்கை என்ற குளம் அமைத்து 'வெற்றியின் ஜலத் தூண்' (கங்கை-ஜலமயம் ஜெயஸ்தம்பம்) ஒன்றை அமைத்தார்.
இக்கோட்டையின் விரிவான விளக்கம் பற்றி ஒட்டக் கூத்தரின் மூவர் உலாவில் இருந்து அறியலாம்.
ராஜ ராஜ சோழன் உலா எனும் நூல் கிட்டத்தட்ட அந்த நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களின் விவரத்தையும் தருகிறது.
ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியில் இந்த நகரம் கங்காபுரி என்று குறிப்பிடப்படுகிறது.