TNPSC Thervupettagam

முதல்வர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள்

August 26 , 2025 2 days 19 0
  • ADR அறிக்கையின்படி, முதலமைச்சர்களில் நாற்பது சதவீதம் பேர் அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகளைக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவில் முப்பது முதலமைச்சர்களில் பன்னிரண்டு பேர் (முதல்வர்கள்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) அதிகபட்சமாக 89 வழக்குகளையும், அதைத் தொடர்ந்து M.K. ஸ்டாலின் (தமிழ்நாடு) 47 வழக்குகளையும் கொண்டுள்ளார்.
  • சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேசம்) 19 வழக்குகளையும், சித்தராமையா (கர்நாடகா) 13 வழக்குகளையும், ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) ஐந்து வழக்குகளையும் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேவேந்திர ஃபட்னாவிஸ் (மகாராஷ்டிரா) மற்றும் சுக்விந்தர் சிங் (இமாச்சலப் பிரதேசம்) ஆகியோர் மீது தலா நான்கு வழக்குகளும், பினராயி விஜயன் (கேரளா) மீது இரண்டு வழக்குகளும், பகவந்த் மான் (பஞ்சாப்) ஒரு வழக்கும் உள்ளன.
  • பத்து முதலமைச்சர்கள் (33%) மீது கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் வாங்குதல் மற்றும் மிரட்டல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 30 நாட்கள் கைது செய்யப்பட்ட பிரதமர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
  • ஜனநாயகச் சீர்திருத்த சங்கம் (ADR) இதனை ஒரு பகுப்பாய்வு அறிக்கையில் கூறியது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்