டெல்லி இராணுவக் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இந்திய கொரிய நட்புறவுப் பூங்காவினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கொரியக் குடியரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் திரு. சூ வூக் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய இராணுவம், டெல்லி இராணுவக் குடியிருப்பு வாரியம், கொரியத் தூதரகம் மற்றும் இந்திய கொரியப் போர் மூத்தப் படை வீரர்கள் சங்கம் ஆகியவற்றைக் கலந்தாலோசித்து இப்பூங்கா உருவாக்கப் பட்டு உள்ளது.
1950 – 53 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொரியப் போர்களில் பங்கேற்ற 21 நாடுகளில் இந்தியாவும் ஓர் அங்கமாகப் பணியாற்றியதை நினைவு கூறும் ஒரு நினைவுச் சின்னமாகவும் இப்பூங்கா திகழும்.