மத்திய அமைச்சரவையானது முத்தலாக் மீதான இரண்டாவது அவசரச் சட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
முஸ்லீம் ஆண்களால் உடனடியாக முத்தலாக் மேற்கொள்ளுதலை தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் ஆக்கியுள்ளது.
தலாக்-இ-பிதாத் நடைமுறையை செல்லுபடியாகாமல் செய்வதற்கான மசோதாவானது மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது. இது ஜூன் 03 அன்று மக்களவை கலைகின்ற பொழுது இந்த மசோதாவும் காலாவதியாகிவிடும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டால், ஓராண்டுக்குள்ளாக மூன்றாவது முறையாக முத்தலாக் அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்.