ஒரே கப்பலில் சாதனை அளவாக 6,008 கார்களை ஏற்றி அனுப்பியதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி மையமாக முந்த்ரா துறைமுகம் உருவெடுத்துள்ளது.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனத்தால் இயக்கப்படும் இத்துறைமுகம், தளவாடத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.
இது அதிவேகமாக வாகனங்களை ஏற்றுவதற்கும் கையாளுதல் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவுகின்ற 'ரோல்-ஆன்/ரோல்-ஆஃப்' (RoRo) முனையத்தைப் பயன் படுத்துகிறது.
இந்தச் சாதனை, வலுவான உற்பத்தி மற்றும் உலகளாவிய தேவையால் உந்தப்படும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் ஏற்றுமதியை எடுத்துக்காட்டுகிறது.
ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகியவை முக்கிய ஏற்றுமதி இடங்களாகும்.