முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட குடியிருப்புப் பிரிவு
January 1 , 2023 899 days 420 0
இந்திய இராணுவமானது, அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது முதலாவது முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட குடியிருப்புப் பிரிவினைத் திறந்து வைத்து உள்ளது.
இராணுவப் பொறியியலாளர் சேவை வழங்கீட்டு அமைப்பானது, MiCoB பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்திய முப்பரிமாண முறையில் அச்சிடப் பட்ட விரைவுக் கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் இந்தக் குடியிருப்புப் பிரிவினை உருவாக்கியுள்ளது.
இது 3வது மண்டலம் சார்ந்த நிலநடுக்கத் தரவுகள் மற்றும் பசுமைக் கட்டிட விதிமுறைகள் ஆகியவற்றிற்கு இணங்கும் வகையில் உள்ளது.