இந்தியாவில், கோவிட்-19 அல்லது SarsCov2 வைரசிற்கு எதிரான ஒரு புதிய தடுப்பூசி உருவாக்கப்படுகிறது.
இது குளிர்பதனம் அல்லது தொடர் குளிர்பதனச் சேமிப்பகமோ தேவைப்படாத ஒரு தடுப்பூசி ஆகும்.
'வைரசஸ்' என்ற இதழில் வெளிவந்த ஓர் ஆய்வின்படி, எலியின் மீது மேற்கொள்ளப் பட்ட சோதனைகளில், இந்தத் தடுப்பூசி வைரஸின் பல்வேறு திரிபுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்புப் பொருள்களை அல்லது ஆன்டிபாடிகளை உருவாக்கியுள்ளது.
இந்த ‘வார்ம்’ (warm) என்றத் தடுப்பூசியை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தினால் உருவாக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த மைன்வாக்ஸ் ஆய்வகம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகின்றது.
இது 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நான்கு வாரங்கள் வரையிலும் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 90 நிமிடங்கள் வரையும் சேமிக்கப்படக்கூடிய தனித்துவ மிக்க ஒரு தடுப்பூசியாகும்.