TNPSC Thervupettagam
January 6 , 2026 5 days 67 0
  • மூத்த திராவிடத் தலைவரும், திமுக உயர்மட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினருமான L. கணேசன் சமீபத்தில் காலமானார்.
  • 1989 ஆம் ஆண்டில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இவர் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இவர் 1965 ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நபராக இருந்தார்.
  • இவர் 1967 ஆம் ஆண்டில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பதோடு மேலும் 2004 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவசரநிலையின் போது, ​​அவர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப் பட்டார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் மக்களவை (M.P.), மாநிலங்களவை (M.P.), தமிழ்நாடு சட்டப் பேரவை (M.L.A.) மற்றும் தமிழ்நாடு சட்ட மேலவை (M.L.C.) ஆகியவற்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒரே அரசியல்வாதி இவரே ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்