மூட்டு வீக்கம் (அழற்சி), மூட்டு வலி மற்றும் கால்கள் நலிவடைதல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள யானைகளுக்காக, தனது முதலாவது சிறப்பு நீர் மருத்துவத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இது உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் யமுனை நதிக்கரையில் வனவிலங்கு SOS என்ற அமைப்பின் யானைகள் பாதுகாப்பு மற்றும் நல மையத்திற்கு (ECCC - Elephant Conservation and Care Centre) அருகில் அமைந்துள்ளது.
இது தற்பொழுது மீட்கப்பட்ட 20 யானைகளைக் கொண்டுள்ளது. உத்தரப் பிரதேச வனத்துறை மற்றும் அரசு சாரா அமைப்பான வனவிலங்கு SOS ஆகியவை கூட்டாக இணைந்து இதனை நிர்வகிக்கின்றது.