ரஃபேலுக்காக கோல்டன் ஏரோஸ் படைப் பிரிவு மீண்டும் புத்துயிராக்கம்
September 11 , 2019 2114 days 598 0
இந்திய விமானப் படையானது (Indian Air Force - IAF) அம்பாலா விமானப் படைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட “கோல்டன் ஏரோஸ்” என்ற 17வது படைப் பிரிவைப் புத்துயிரூட்டி மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
ரஃபேல் போர் விமானங்களின் முதலாவது படைப் பிரிவை இயக்குவதற்குப் பயிற்சி பெற்ற முதலாவது பிரிவு இதுவாகும்.
இந்தப் படைப் பிரிவை மீண்டும் பணியில் இணைக்கும் விழாவானது IAFன் தலைமைத் தளபதியான பி.எஸ் தனோவாவால் தலைமை தாங்கப் பட்டது.
கோல்டன் ஏரோஸ் படைப் பிரிவு பற்றி
17வது படைப் பிரிவானது 1951 அக்டோபர் 01 ஆம் தேதி விமானப் படை அதிகாரியான டி.எல். ஸ்பிரிங்கெட் என்பவரின் தலைமையின் கீழ் அம்பாலாவில் ஏற்படுத்தப்பட்டது.
ரஷ்யாவைச் சேர்ந்த மிக் - 21 ஜெட் விமானங்களின் செயல்பாடுகளை IAF படிப்படியாக நிறுத்தத் தொடங்கிய பின்னர் இது 2016 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
மேலும் இது 1999 ஆண்டில் ஏற்பட்ட கார்கில் மோதலின் போது தற்போதைய விமானப் படைத் தலைமைத் தளபதியான தனோவா என்பவராலும் தலைமை தாங்கப்பட்டது.
அம்பாலா விமானப் படை தளம் பற்றி
1948 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஹரியானாவில் இருக்கும் இந்த அம்பாலா விமானப் படைத் தளமானது இராணுவ மற்றும் அரசாங்க விமானங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
இது ஜாகுவார் போர் விமானத்தின் இரண்டு படைப் பிரிவுகளையும் மிக் - 21 பைசனின் ஒரு படைப் பிரிவையும் கொண்டுள்ளது.
இந்தத் தளத்தின் முதலாவது தளபதி விமானப் படை அதிகாரி அர்ஜன் சிங் ஆவார்.