TNPSC Thervupettagam

ரயில்வேயில் ஆட்சேர்ப்பு

December 29 , 2019 2001 days 696 0
  • ரயில்வே துறையில் இனிப் புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள் அனைவரும் மத்தியப் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வுகளின் மூலம் ஐந்து சிறப்புப் பிரிவுகளின் கீழ் சேர்க்கப் படுவார்கள் என்று ரயில்வே வாரியம் தற்பொழுது முடிவு செய்துள்ளது.
  • அரசானது ரயில்வேயின் எட்டு பிரிவுகள் மற்றும் அதன் துறை சார்ந்த பணிகளை “இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி” (Indian Railway Management Service - IRMS) என்ற ஒரே ஒரு சேவைப் பணியாக இணைத்துள்ளது.
  • மேலும், ரயில்வே வாரியத்தின் தலைவர் தேசிய போக்குவரத்துத் துறையான ரயில்வேத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இந்திய ரயில்வேப் பணியின் அதிகாரியாகவும் இருப்பார். வேறு எந்தவொருப் பணியிலிருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட மாட்டார்.
  • மேலும், 35 ஆண்டு கால அனுபவம் உள்ள இந்திய ரயில்வே அதிகாரிகள் மட்டுமே தலைவர்/தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் படுவார்கள்.

ரயில்வே வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள்

  • இந்தப் புதிய மாற்றங்களின் மூலம், தலைவர் மற்றும் அதன் 4 உறுப்பினர்கள் முறையே உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் & வணிக மேம்பாடு, நிதி மற்றும் பங்குகளை நிர்வகித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையவர்களாக இருப்பர்.
  • இந்த வாரியமானது சில நிர்வாகம் சாராத சுயாதீன உறுப்பினர்களையும் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்