TNPSC Thervupettagam

ரயில்வே செய்திகள்

January 14 , 2020 2000 days 636 0
  • இந்திய ரயில்வேவானது மின்னணு முறையிலான அலுவலகம் என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையைச் செயல்படுத்தும் பொருட்டு மினி ரத்னா பிரிவைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமான ரெயில்டெல் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • மின்னணு முறையிலான அலுவலக அமைப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த கோப்பு மேலாண்மை அமைப்பாகும். இது கோப்புகளின் தரவு, உள்ளடக்கம் ஆகியவற்றை மின்னணு முறையில் நிர்வகிக்க ஊழியர்களுக்கு உதவ இருக்கின்றது.
  • மின்னணு முறையிலான அலுவலக அமைப்பானது காகிதமற்ற கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது செயல்பாட்டுச் செலவைக் குறைக்க உதவுவதோடு கார்பன் அடிச்சுவட்டையும் குறைக்க உதவ இருக்கின்றது.
  • இது தேசியத் தகவல் மையத்தினால் (National Informatics Centre - NIC) செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • தெற்கு மத்திய ரயில்வே மற்றும் பாரத வங்கி ஆகியவை இந்தியாவில் உள்ள 585 ரயில் நிலையங்களில் வங்கிச் சேவையைச் செயல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • ரயில் நிலையங்களில் செயல்பட இருக்கும் இந்த வங்கிச் சேவையானது அனைத்து ரயில் நிலையங்களிலும் சீரான முறையில் பணம் அனுப்பும் வசதியை வழங்க இருக்கின்றது.

NIC

  • தேசியத் தகவல் மையமானது 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இது அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதற்காகவும் டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சிகளை வழங்குவதற்காகவும் உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்