99.6% அகல ரயில் பாதை வலையமைப்பை மின்மயமாக்கியதன் மூலம், ரயில்வே மின்மயமாக்கலில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
சீனா (82 சதவீதம்), ஸ்பெயின் (67 சதவீதம்), ஜப்பான் (64 சதவீதம்), பிரான்ஸ் (60 சதவீதம்) மற்றும் ஐக்கியப் பேரரசு (39 சதவீதம்) உள்ளிட்ட பல முக்கிய ரயில்வே வலையமைப்புகளை விட இது முன்னணியில் உள்ளது.
ரயில் போக்குவரத்து ஒரு டன்-கிலோமீட்டருக்கு சுமார் 11.5 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என்ற நிலையில் இது, சுமார் 101 கிராம் வெளியிடும் சாலைப் போக்குவரத்தை விட கிட்டத்தட்ட 89 சதவீதம் குறைவாகும்.
மின்மயமாக்கல், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் இந்திய ரயில்வேயின் நிலையையும் குறைத்துள்ளது.
சுற்றுச்சூழல் நன்மைகளைத் தவிர, மின்சார இழுவை முறையானது அதிக இழுவைத் திறன், வேகமான ரயில் வேகம் மற்றும் குறைந்த பயண நேரம் ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதன் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளது.
ரயில்வே மண்டலங்களைப் பொறுத்தவரை, மத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு, தென் மத்திய மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வேக்கள், கொங்கன் ரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ உள்ளிட்ட 15 மண்டலங்கள் ஏற்கனவே 100 சதவீத அளவிலான மின் மயமாக்கலை அடைந்துள்ளன.
மாநில அளவில், ஆந்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் முழுமையான ரயில்வே மின்மயமாக்கலை அடைந்துள்ளன.