ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை
May 21 , 2025 14 hrs 0 min 31 0
ரஷ்யா மற்றும் உக்ரைனிய நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத தங்கள் முதல் நேரடியான அமைதிப் பேச்சு வார்த்தைக்காக இஸ்தான்புல் நகரில் கூடினர்.
இரு நாடுகளும் தலா 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன.
ஆனால் நிபந்தனையற்றப் போர் நிறுத்தத்திற்கான உக்ரைனின் அழைப்பை ரஷ்யா நிராகரித்தது.
ரஷ்யா முதன்மையாக அது கோரும் பிரதேசத்தை விட்டுக் கொடுக்கவும், உக்ரைனின் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து பெறும் விருப்பத்தினைக் கை விட்டு நடுநிலை நாடாக மாறவும் கோரியது.
ரஷ்யாவானது கிரிமியா (2014) மற்றும் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா (2022 ஆம் ஆண்டு முதல்) ஆகியவற்றினை உரிமை கோருகிறது.