ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் சபை வாக்களிப்பு
March 8 , 2022 1255 days 499 0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை “மிக வன்மையாகக் கண்டிக்கும்” ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை.
உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பதற்கு இந்தத் தீர்மானம் கோரியது.
ஐ.நா.சபையின் உறுப்பினர் நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பினர்கள் கொண்ட சபையில், இந்த தீர்மானத்தினைப் புறக்கணித்த 13 நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.
ரஷ்யா மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.