1946 ராயல் இந்தியக் கடற்படை (RIN) கிளர்ச்சியின் 80வது ஆண்டு விழா பிப்ரவரி 18, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது.
இந்தக் கலகம் ஆங்கிலேயக் காலனித்துவ அதிகாரத்திற்கு எதிராக இந்தியக் கடற் படைக் குழுக்களால் ஐந்து நாள் கிளர்ச்சியாக (18–23 பிப்ரவரி 1946) நடைபெற்றது.
இது மோசமான உணவு, குறைந்த ஊதியம் மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றிற்கான போராட்டமாகத் தொடங்கி, இந்தியா முழுவதும் 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைக் குழுக்களுக்கும் பரவியது.
கிட்டத்தட்ட 20,000 மாலுமிகள் பங்கேற்ற இதில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து, இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் காட்டினர்.