இஸ்ரேல் அரசானது ரைசிங் லயன் நடவடிக்கையின் கீழ் ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களைக் குறி வைத்து தாக்கியது.
இந்த உயர் நிலை இலக்குகளில் நடன்ஸ் மற்றும் ஃபோர்டோவில் உள்ள சில அணுசக்தி நிலையங்களும் அடங்கும்.
கோண்டாப் மற்றும் கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தித் தளங்களும் குறிவைக்கப் பட்டன.
இந்த நடவடிக்கையானது, ஈரான் நாட்டின் ராணுவத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
ஈரான் நாட்டின் புரட்சிகர இராணுவப் படையின் (IRGC) விமானப்படை தளபதி அமீர் அலி ஹாஜிசாதே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
IRGC தளபதி ஹொசைன் சலாமி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இஸ்ரேல் மீது ஈரானின் உந்து விசை எறிகணை மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களுக்கு IRGC விமானப் படைப் பொறுப்பேற்றது.
அதற்கு ஒரு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நாடானது இஸ்ரேலைத் தாக்கி, ட்ரூ பிராமிஸ் III எனும் நடவடிக்கையினைத் தொடங்கியது.