TNPSC Thervupettagam

ரோகிணி ஆணையத்தின் பணிக் காலம் நீட்டிப்பு

January 24 , 2020 2006 days 814 0
  • ஓய்வுபெற்ற நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes - OBCs) துணை வகைப்படுத்துதல் ஆணையமானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியன்று அரசியலமைப்பின் 340வது பிரிவின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அமைக்கப் பட்டுள்ளது.
  • மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைப்படுத்துதல் குறித்தப் பிரச்சினையை ஆராய இது அமைக்கப் பட்டுள்ளது.
  • இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இந்த ஆணையமானது தனது பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு, அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
  • OBCகளுக்கான மத்தியப் பட்டியலில் உள்ள விளிம்பு நிலைச் சமூகங்களின் நலனுக்காக இந்த ஆணையமானது பரிந்துரைகளை வழங்க உள்ளது.
  • OBCகளின் துணை வகைப்படுத்துதலானது OBC சமூகங்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகள் ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்ய இருக்கின்றது.
  • எனவே, மத்திய அரசு தற்பொழுது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைகளின் அடிப்படையில் பின்தங்கிய வகுப்பின் கீழ் வரும் சாதிக் குழுக்களை மேலும் வகைப்படுத்துவதன் மூலம் இடஒதுக்கீட்டுச் சலுகைகளை இன்னும் சமமாக வழங்கப் படுவதை உறுதி செய்ய முயல்கின்றது.
  • தற்போதைய நிலையில் துணை வகைப்படுத்துதலானது அறவே இல்லை. 27% இட ஒதுக்கீடானது ஒரே சீரான இடஒதுக்கீடாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்