லடாக் பகுதியில் ‘பரம்பராகத் கிரிஷி விகாஷ் யோஜனா’ மற்றும் இயற்கை முறை மேம்பாட்டு முன்னெடுப்புத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவது தொடர்பாக லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது சிக்கிம் மாநில இயற்கைமுறை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்துடன் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் லடாக் பகுதியை இயற்கைமுறைச் சான்றிதழ் பெற்ற ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
மூன்று கட்டங்களின் மூலம் இயற்கைமுறைச் சான்றிதழ் நிலையை (organic status) பெற ஒன்றியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகின் முதலாவது 100 சதவீத இயற்கை முறை மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது.