பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கொடிய மூளைச் செயலிழப்பு நோயின் (AES - Acute Encephalitis Syndrome) காரணமாக 100ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன.
குழந்தைகள் லிட்சிப் பழங்களைச் சாப்பிடுவதன் காரணமாக இந்த இறப்புகள் ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் தற்பொழுது லிட்சிப் பழங்கள் மற்றும் கொடிய மூளைச் செயலிழப்பு நோய் ஆகியவற்றிற்கிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என்று முசாபர்பூரில் உள்ள தேசிய லிட்சி ஆராய்ச்சி மையத்தின் (NRCL - National Research Centre on Litchi) இயக்குநர் கூறியுள்ளார்.
NRCL என்பது லிட்சிப் பழங்களின் மீதான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் முதன்மை தேசிய நிறுவனமாகும்.