இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 10 மாத கடல்கடந்த பயணமாகும்.
இது இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி மேற்கொள்ளும் 22,000 கடல் மைல் தொலைவு கொண்ட ஒரு உலகளாவிய பயணமாகும்.
இது கேரளாவின் கொச்சியிலிருந்து புறப்பட்டது.
கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவின் வளமான கடற்பயணப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், இது 13 நாடுகளில் உள்ள 18 துறைமுகங்களைக் கடந்து செல்கிறது.
அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் 'நியூயார்க் செயில் 4த் 250' நிகழ்வில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி இணைகிறது.
'செயில் 4த் 250' கொண்டாட்டங்கள், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றன.