2025 ஆம் ஆண்டு டிசம்பரில் CASA (நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு) விகிதம் 37.9% ஆகக் குறைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
CASA வைப்புத் தொகைகள் என்பது வங்கிகளில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைக்கப் படும் குறைந்த செலவிலான வைப்புத்தொகைகளாகும்.
மக்கள் தங்களது பணத்தை பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தங்கம் போன்ற அதிக வருமானம் தரும் முதலீடுகளுக்கு மாற்றியதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்குகளின் பங்கு 28.9% ஆகக் குறைந்ததே ஒட்டுமொத்த CASA விகிதச் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
CASA விகிதம் குறைவது வங்கிகளின் நிதிச் செலவை அதிகரிக்கிறது, ஏனெனில் அவை அதிக வட்டி கொண்ட வைப்புத்தொகைகள் மற்றும் கடன்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இது வங்கிகளின் லாபத்தைக் குறைப்பதோடு, அவற்றின் கடன் வழங்கும் திறனையும் பாதிக்கலாம்.