TNPSC Thervupettagam

வங்கி தேசியமயமாக்கல் – 50 ஆண்டுகள்

July 26 , 2019 2118 days 2274 0
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் 50வது ஆண்டை இந்தியா அனுசரிக்கின்றது.
  • அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடனளிக்கும் முக்கியமான 14 வங்கிகளின் தேசிய மயமாக்கத்தைத் தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள மொத்த வங்கி வைப்பு நிதியில் 85 சதவிகித வைப்பு நிதியை இந்த வங்கிகள் கொண்டுள்ளன.
  • வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பொதுத் துறைப் பரிமாற்றம்) அவசரச் சட்டம், 1969-ன் கீழ் இந்த வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டம் பின்னர் மசோதாவாக மாறியது.
  • பின்னர் 1980 ஆம் ஆண்டில் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • பெரிய வணிகங்கள் கடன் வழங்குதலில் ஆதிக்கம் செலுத்திய அந்த நேரத்தில் முன்னுரிமைத் துறைகளை ஊக்கப்படுத்துவது என்பது தேசியமயமாக்கலின் முக்கியக் குறிக்கோளாகும்.
  • இந்தியாவில் மிகப்பெரிய கடனளிக்கும் வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்