மத்திய ஜவுளித்துறை அமைச்சகமானது சென்னையில் உள்ள நெசவாளர் சேவை மையத்தில் ஒரு வடிவமைப்பு வள மையத்தை அமைத்து வருகிறது.
கைத்தறித் துறையில் சிறப்பான வடிவமைப்பு அம்சத்தினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்களது மாதிரிகள் / தயாரிப்புப் பொருட்களை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்த வடிவமைப்புக் களஞ்சியங்களை அணுகச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகமானது இதற்காக தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இதே போன்ற வள மையங்கள் ஏழு மையங்களில் முன்பே அமைக்கப் பட்டுள்ளன.
அவற்றுள் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மையமானது சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டது.