TNPSC Thervupettagam

வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021

August 5 , 2022 1048 days 2040 0
  • 2021 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) திருத்த மசோதாவினை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒரு உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்த இது முயல்கிறது.
  • இந்த மசோதா, இந்திய வனங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய இனங்களின் இறக்குமதி, வர்த்தகம், உடைமை அல்லது பெருக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தச் செய்வதற்கும் நிறுத்துவதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.
  • உயிரினங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றிற்கான அனுமதிகளை வழங்கச் செய்வதற்கு ஒரு மேலாண்மை ஆணையத்தை அரசாங்கம் நியமிப்பதற்கும், அது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனையை வழங்கச் செய்வதற்கான அறிவியல் ஆணையத்தினை அமைப்பதற்கும் இந்தப் புதிய மசோதா வழிவகை செய்யும்.
  • இந்தத் திருத்த மசோதாவானது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒரு நிலைக் குழுவிடம் ஆய்விற்காக அனுப்பப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்