தமிழ்நாட்டில் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீட்டுத் திட்டத்தின் கீழ் 9,00,181 கோடி ரூபாய் வருடாந்திர கடன் வழங்கீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024-25 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதை விட 21.12% அதிகமாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
மாநிலத்தில் 126% என்ற அளவிலான கடன்-வைப்பு விகிதமானது நாட்டிலேயே சிறந்த மதிப்பிலானதாகும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 6,63,993.27 கோடி ரூபாயாக இருந்த முன்னுரிமைத் துறைகளுக்கான முன் தொகையானது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 7,43,194.33 கோடி ரூபாயாக அதிகரித்தன.