TNPSC Thervupettagam

வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை 2025

January 17 , 2026 5 days 53 0
  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) 2025 ஆம் ஆண்டு வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியாவின் நிலத்தடி நீரில் 71.7% BIS (இந்தியத் தரநிலைகள் வாரியம்) வரம்புகளை பூர்த்தி செய்கிறது அதே நேரத்தில் 28.3% மாதிரிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தர அளவுருக்களை மீறுகின்றன.
  • சுமார் 20% மாதிரிகள் 45 மி.கி/லி என்ற பாதுகாப்பான வரம்பைக் கடந்துள்ளதுடன் நைட்ரேட் மிகவும் பரவலான மாசுபடுத்தியாக உள்ளது, இதற்கு முக்கிய காரணம் உரங்கள், கழிவுநீர் மற்றும் விலங்கு கழிவுகள் ஆகும்.
  • பஞ்சாப் மாநிலத்தில் மிக உயர்ந்த அளவு பதிவாகியுள்ளதுடன் யுரேனியம் மாசுபாடு 30 ppb (பில்லியனுக்கு எத்தனை பாகங்கள்) என்ற பாதுகாப்பான வரம்பை விட அதிகமாக 6.71% (பருவமழைக்கு முன்) மற்றும் 7.91% (பருவமழைக்குப் பிந்தைய) மாதிரிகளில் கண்டறியப்பட்டது.
  • ஃப்ளோரைடு மாசுபாடு (8.05% மாதிரிகள்) முக்கியமாகப் புவி சார்ந்ததாக உள்ளது (இயற்கையாக நிகழும்).
  • இராஜஸ்தானில் அதிக ஃப்ளோரைடு அளவுகள் பதிவாகியுள்ளன அதே நேரத்தில் டெல்லியில் அதிக ஈய மாசுபாடு பதிவானது.
  • சுமார் 94.30% நிலத்தடி நீர் மாதிரிகள் பாசனப் பயன்பாட்டிற்குச் சிறந்தவையாக உள்ளது என்பதுடன் இது விவசாயத்திற்கான ஒட்டு மொத்தமாக ஏற்ற தன்மையைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்