TNPSC Thervupettagam

வர்த்தக முத்திரை பாதுகாப்பு - பூரி ஜெகநாதர் கோயில்

June 16 , 2026 13 hrs 0 min 28 0
  • ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகம் (SJTA) ஆனது நீலச்சக்கரம் சின்னம் மற்றும் பதிதபபனா மற்றும் ஆனந்த பஜாரா ஆகிய சொற்களுக்கு வர்த்தக முத்திரைப் பாதுகாப்பைப் பெற்றுள்ளது என்பதோடு இத்தகையப் பாதுகாப்பைப் பெறும் முதல் இந்திய வழிபாட்டுத் தலம் இதுவாகும்.
  • 'பதிதபபனா' என்றால் வீழ்ந்தவர்களின் இரட்சகர் என்று பொருள், மேலும் 'ஆனந்த பஜாரா' என்பது கோயிலின் உள்ளே உள்ள புனிதமான மகாபிரசாத உணவருந்தும் பகுதியாகும்.
  • 'நீலச்சக்ரா' என்பது கோயில் கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள புனிதமான எட்டு ஆரங்களைக் கொண்ட உலோக வட்டமாகும்.
  • 'வெள்ளை பகோடா' என்றும் அழைக்கப்படும் பூரி ஜெகநாதர் கோயில், பொது ஆண்டு 12-ஆம் நூற்றாண்டில் அனந்தவர்மன் சோடகங்க தேவரால் கட்டப்பட்டது; இது கலிங்க பாணியிலான நகர கட்டிடக்கலையைப் பின்பற்றுகிறது.
  • இக்கோயில் நான்கு 'சார் தாம்' திருத்தலங்களில் ஒன்றாகும் மற்றும் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை திருவிழாவின் மையமாகவும் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்