எல்லைப்புறக் கிராமங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக 'வளர்ந்த எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின்' (VVVP) 2026 ஆம் ஆண்டிற்கான முதல் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் உள்ள ‘மேரா யுவ பாரத்’ (MY Bharat) அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டமானது லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 43 எல்லைப்புறக் கிராமங்களை உள்ளடக்கியது, இதில் 250 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
ஏழு நாட்கள் நடைபெறும் இத்திட்டமானது, எல்லை குறித்த விழிப்புணர்வு, கலாச்சாரப் பரிமாற்றம், நிர்வாகம், கிராம மேம்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இது மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.