அடுத்து வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலையொட்டி குடிமக்கள் தங்கள் பெயர், தங்கள் பதிவுகள், தங்கள் வாக்காளர் விவரங்களில் மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம் என்பதை ஆரம்பித்திருக்கின்றது.
மேலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் உதவி மைய எண்ணாக 1950 என்ற வசதியுடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடர்பு மையங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த தகவல் மையங்கள் அழைப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் சமீபத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
மாற்றுத் திறனாளிகள் புதிய பதிவு, முகவரியில் மாற்றம், விவரங்களில் மாற்றம் மற்றும் தங்களை மாற்றுத் திறனாளிகள் என்று குறிப்பிடுவது ஆகியவற்றை கைபேசி செயலியின் மூலம் செய்வதற்கு வசதியாக PWD செயலி என்ற செயலியும் வெளியிடப்பட்டது.