TNPSC Thervupettagam

வாக்காளர் வாக்குப்பதிவு அறிக்கை 2025

June 8 , 2025 2 days 14 0
  • பீகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நேரத்தில், ECINET எனும் அதன் புதிய கைபேசிச் செயலியில் தானியங்கி அறிக்கையிடல் அம்சத்தினை அறிமுகப் படுத்துவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.
  • இந்தப் புதிய செயலி வாக்காளர் வாக்குப் பதிவின் போக்குகள் குறித்து விரைவாகப் பதிவு செய்ய உதவும்.
  • தற்போது, ​​ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியும் வாக்காளர் வாக்குப் பதிவு எண்ணிக்கையை ஒரு அரசுத் துறை அதிகாரியிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது செய்திகள் மூலமாகவோ இந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கிறார்.
  • இந்தத் தரவுகள் கை முறையாகத் தொகுக்கப்பட்டு, அத்தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறையில் வாக்காளர் வாக்குப்பதிவு செயலியில் உள்ளிடப்படும்.
  • இந்தப் புதிய அமைப்பு ஆனது, ஒவ்வொரு தலைமை அதிகாரியும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறையில் ECINET செயலியில் வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்களை நேரடியாக உள்ளிட வழி வகுக்கும்.
  • இந்தச் செயலி மூலம், அத்தொகுதிக்கான வாக்குப்பதிவு தானாகவே கணக்கிடப்பட்டு பொது மக்களுக்குக் காட்டப்படும்.
  • 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் 49Sவது விதியின் கீழ், தலைமை அதிகாரிகள் (PRO) படிவம் 17C ஆவணத்தினை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்