மத்தியக் கல்வி அமைச்சகமானது, பள்ளி மாணவர்களுக்கான நாடு தழுவிய அளவிலான புத்தாக்கச் சவாலான விக்ஸித் பாரத் பில்டத்தான் 2025 என்ற நிகழ்ச்சியினைத் தொடங்கியது.
இந்த நிகழ்வானது அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக் மற்றும் AICTE ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பில்டத்தான் நிகழ்ச்சியானது உள்ளூர் மக்களுக்கான குரல் கொடுத்தல், ஆத்ம நிர்பர் பாரத், சுதேசி மற்றும் சம்ரிதி ஆகிய நான்கு கருத்துருக்களைச் சார்ந்து புதுமைகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.
இது அடிமட்டத்திலான புத்தாக்கக் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், இளைஞர்களை சுயசார்பு மற்றும் வளமான இந்தியாவின் இயக்கிகளாக மாறுவதற்கான அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.